Welcome to my blog!

Meet the Author

Ut eleifend tortor aliquet, fringilla nunc non, consectetur magna. Suspendisse potenti.

Looking for something?

Subscribe to this blog!

Receive the latest posts by email. Just enter your email below if you want to subscribe!

Pages

Subscribe:

Ads 468x60px

Search

Custom Search

Total Pageviews

Wednesday 22 October 2014

ஜெபிக்கவும்

கோயம்புத்தூர் கனுவாய் பகுதியில் இருக்கும் இந்த ரகசிய சபைக்காக ஜெபிப்பதற்கு ஏராளமான ஜெப வீரர்கள் தேவை. இவர்கள் மற்ற எல்லா சபைகளையும் விட சிறந்த போதனைகளை பெற்றுக்கொள்வதாக நினைக்கிறார்கள். இவர்களுடைய தலைவர்களின் போதனையையே இவர்கள் முற்றிலுமாக நம்புகிறார்கள், ஆனால் பெரும்பாலானோருக்கு வேதாகமத்தை தானகவே படிக்க தெரியாது.








யெகோவா சாட்சிகள், மார்மான்கள், ICOC, Unification Church, Heavenly Gate உள்ளிட்ட ரகசிய சபைகளைப் போலவே இவர்களும் இந்த சபையின் போதனையை ஏற்றுக்கொள்ளாத குடும்ப அங்கத்தினர்களையும் பிரிந்து வாழும்படியாக இவர்களுடைய தலைவர்கள் இவர்களை வழிநடத்துவதாக இந்த சபையில் இருந்து வெளியேறியவர்கள் கூறுகின்றார்கள்.
”இயேசு கிறிஸ்துவின் மாம்சத்திலே பாவம் இருந்தது, அதற்காக அவர் ஜெபித்து விடுதலையானார்” என்று இவர்கள் போதிக்கிறார்களா  என்பதை இவர்களை சந்திக்கும் நபர்கள் இவர்களிடமே கேட்டு தெரிந்துகொள்ளவும்.
இவர்களை குறித்த பல்வேறு தகவல்கள் இந்த வலைப்பூவின் வேறு தலைப்புகளில் கொடுக்கபப்ட்டு இருக்கின்றன. அவற்றை படித்து தெரிந்துகொள்ளுங்கள்

தற்போது கோயம்புத்தூர் கனுவாய் பகுதியில் இந்த சபைக்கு செல்லும் என் நண்பர்களுக்காக ஜெபிக்கும்படி உங்கள் அனைவரிடமும் நான் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். இவர்கள் அப்பாவிகள், மிகவும் அன்பானவர்கள், வேதாகமத்தை முறைப்படி படிக்க மட்டும் தெரியாது. மொத்தம் இச்சபையில் தற்போது 8-10 குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன. அங்கு உள்ளவர்களின் பெயர்களை இங்கே நான் குறிப்பிடுகிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் உங்கள் தனிப்பட்ட ஜெபங்களிலும், குடும்ப ஜெபங்களிலும், ஜெப கூட்டங்களிலும் ஜெபித்துக்கொள்ளுமாறு உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அதிகமானோர் ஜெபிக்கும்போது விடுதலை சீக்கிரத்தில் கிடைக்கும் என்றும் விசுவாசிக்கிறேன்.

கீழ்காணும் நபர்களுக்காக தினந்தோறும் ஜெபிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

ஜெயராம் ,ஜோசுவா டேனியல், ஜெயராஜ், ஜெமிமா, பிரிசில்லா
ஜெயபால்,  புஷ்பா, மீரா, கிறிஸ்டீனா, சாமுவேல், எபி,தபித்தா, ரவி,  சலோமி
பழனியப்பன், இளங்கோ, இவாஞ்சலின், சில்வியா, சிமியோன்
சின்னமுனியப்பன்,ஜெயபாரதி, ஜெயலஷ்மி,அன்பரசு
லிஸ்பன் மற்றும் அவருடைய பெற்றோர் மற்றும் சகோதரி, ஜான்பால், மாஸ்டர்.சிமியோன், ஜோஹான்னா, ஜோஹன், ஜீவானந்தம், சுஜி, லவ்ரா, இன்னும் சிலரது பெயர்கள் மறந்துவிட்டன. அவர்களுக்காகவும் ஜெபிக்கவும்.

இவர்களுடைய சபை நார்வே நாட்டில் தொடங்கப்பட்டது, இவர்களுடைய தற்போதைய ஆவிக்குரிய தலைவர் கோரா ஸ்மித். நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு இருப்பது கோரா ஸ்மித்தின் உறவினரும், இதை நிருவிய ஜோஹன் ஆஸ்கர் ஸ்மித்தின் மற்றும் ஒரு பேரனுமான லார்சன்.  இவர்களுக்காகவும் ஜெபிக்கவும்.

இவர்களுடைய இந்திய தலைவர்கள் கேப்ரியேல் மற்றும் மேத்யூ ஜார்ஜ். இவர்களுக்காகவும் ஜெபிக்கவும்.

இவர்கள் அனைவருக்கும் கர்த்தர் தாம் யார் என்பதை வெளிப்படுத்தி, வேதாகமத்தை தெளிவாக வாசித்து அர்த்தம் புரிந்துகொண்டு, அதன்படி வாழ்க்கை நடத்த கற்றுக்கொடுக்குமாறு ஜெபிக்கவும்.

Friday 10 October 2014

கேட்க வேண்டிய கேள்விகள்

  



கோயம்புத்தூர், கணுவாய் பேருந்து நிலையத்தில் இருந்து நடக்கும் தூரத்தில், அண்ணாநகர் என்கிற பகுதியில் உள்ள ஒரு சிறு குடிசையில் ப்ருன்ஸ்டாட் கிறிஸ்தவ சபை என்னும் இந்த ரகசிய சபை  நடந்து வருகின்றது. 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட பல ரகசிய சபைகளில் இதுவும் ஒன்று. அதில் மிகவும் சிறப்பான அம்சம் எனக்கு தெரிந்த மற்ற எல்லா சபைகளையும்விட இந்த சபை மிகவும் ரகசியமாக தங்கள் ஆராதனை இடத்தையும், கொள்கைகளையும் வைத்து இருப்பது தான். ஏறத்தாழ 30 வருடங்களுக்கும் முன்னதாகவே இந்த சபை கோயம்புத்தூரில் இருந்து வந்தாலும், நம்மில் பலருக்கும் யெகோவா சாட்சிகளை பரீட்சையமானது போல இந்த சபையின் பெயர் பரீட்சையமானது அல்ல. இதில் இவர்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. இவர்களுடைய கூட்டத்தை சார்ந்தவர்கள் இவர்களுக்குள் மட்டுமே தான் திருமணம் செய்துகொள்வார்கள். அதில் சில சமயம் ஆண்-பெண் எண்ணிக்கை குறையும்போது வேறு சபையை சார்ந்தவர்கள் தங்கள் சபையில் இணைந்தாலாவது தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்கும் என்கிற எண்ணத்தில் இவர்கள் உங்களில் யாருக்காவது அழைப்புவிடுக்கவும் வாய்ப்பு உண்டு. ஆகவே இவர்களுடைய சபையில் இணைவதற்கு முன்பாக சில காரியங்களை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அவை என்ன என்பதை அவர்கள் மிகவும் ரகசியமாக பாதுகாப்பதால், அவர்களுடைய புத்தகங்கள் கூட வேறு இடங்களில் கிடைப்பது கிடையாது. மேலும் அவர்களுடைய போதனை இதுதான் என்று கூறுகிறவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்ட சம்பவங்களும் உண்டு. ஆகவே அவர்களுடைய போதனை என்ன என்பதை நீங்களாகவே தெரிந்துகொள்ள கீழ்காணும் கேள்விகளை அவர்களிடம் கேளுங்கள்.

1. இயேசு கிறிஸ்துவின் மாம்சத்தில் இச்சை, பாவம் ஆகியவை இருந்தது என்றும், அவர் அவற்றை மேற்கொள்ள ஜெபம் செய்தார் என்றும் போதிக்கிறீர்களா?
2. உங்கள் சபையின் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன், இருப்பினும் என் உறவினரும் என் மனைவியும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நான் அவர்களை பிரிந்து வாழ வேண்டுமா?
3. உங்களுக்கு வேதாகமத்தை முறைப்படி படிக்க தெரியுமா? அல்லது உங்கள் தலைவர்களின் புத்தகங்கள், கடிதங்கள் மற்றும் போதனைகளின் மூலமாக மட்டுமே வேதாகமத்தை புரிந்துகொள்கிறீர்களா?
4. உங்களுக்கும் பிற சபைகளுக்கும் என்ன வித்தியாசம்?
5. உங்களுக்கும் யெகோவாவின் சாட்சிகள், மார்மான்கள் உள்ளிட்ட ரகசிய சபைகளுக்கும் என்ன வித்தியாசம்?
6. (இதை நீங்களாகவே செய்து பாருங்கள்), ஒரு தாளில் ஒரு பக்கம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரை எழுதிக்கொள்ளுங்கள், மறுபக்கம், அவர்களுடைய தலைவர்கள் கோரா ஸ்மித், லார்சன், கேப்ரியேல் மற்றும் மேத்யூ ஜார்ஜ் உள்ளிட்டவர்களின் பெயர்களை எழுதிக்கொள்ளுங்கள். ஆராதனை தொடங்கியதில் இருந்து எத்தனை முறை கடவுளுடைய பெயரை உச்சரிக்கிறார்கள் என்பதையும், எத்தனை முறை அவர்களுடைய தலைவர்களுடைய பெயரை உச்சரிக்கிறார்கள் என்பதையும் கவனியுங்கள்?
7. அவர்களுடைய பிள்ளைகளுக்கு நடத்தப்படும் குழந்தைகள் கூடுகையில் (நம்முடைய ஞாயிறு பள்ளி போலத்தான்) குழந்தைகள் எங்கு செல்ல வேண்டும் என்று ஜெபிக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்பதை கவனிக்கவும்.

மேற்கண்ட கேள்விகளை கேட்டால், நீங்களே அவர்களுடைய போதனை என்ன என்பதை புரிந்துகொள்ளலாம். இந்த சபைக்கு செல்லும் என் நண்பர்களின் ஆத்துமாக்களுக்காகவும், அவர்களுடைய குடும்பங்களின் நல வாழ்வுக்காகவும், இந்த வலைப்பூவை படிக்கிற ஒவ்வொருவரும் ஜெபிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிப்பட்ட ரகசிய சபைகளை குறித்து  மேலும் சில வலைப்பூக்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:


http://tamil-christian-cults.blogspot.com/
http://cultornotbcc.blogspot.com/
ianvincent.wordpress.com/2010/02/09/smiths-friends/
https://freedomofmind.com/Info/infoDet.php?id=212
http://tochristians.wordpress.com/…/cult-thinking-explained/
http://atheismthunderbear.blogspot.in/…/smiths-friendsbruns…
www.tb.no/…/smiths-venner-toppene-logn-oppspinn-og-konspira…
http://fivepts.blogspot.in/2006/08/is-this-cult.html



இவர்களுடைய பழைய பெயர்: "Smith's Friends"
இந்தியாவில் இவர்களுடைய பெயர் : Brunstad Christian Church 
வேறு பெயர்கள் : "The Norwegian brothers", "Norwegian" "Smithianer", "The Kristelige menighet" (DKM) - "The Christian community", "Norwegians movement", "De Noorse Broeders": 
நார்வே நாட்டில் வழங்கப்படும் பெயர்கள் :  "Christian Family Association" , "club life", "Life eV association" , "eV The Christian Community" to;  "Association Française chrétienne et de pays Francophones" (ACFF);  "The Christian Church"

Thursday 9 October 2014

எச்சரிக்கை !!!

இந்த தருணத்திலே ஒரு முக்கியமான செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நான் இருக்கிறேன்...
யாக்கோபு 1:5-6
"உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான்."
மேற்கண்ட வசனத்தை நீங்கள் படித்து, அதன்படி ”எனக்கு ஞானத்தை கொடும் ஆண்டவரே !!” என்று ஜெபித்தால் அவர் நிச்சயமாக உங்களுக்கு பலன் அளிப்பார். நிச்சயம் வேதாகம உண்மைகளை புரிந்துகொள்ளும் ஆற்றலை உங்களுக்கு கற்றுக்கொடுப்பார். இதன் மூலமாக உங்கள் ஆத்துமாவையும், உங்கள் குடும்பங்களையும் நீங்கள் பாதுகாத்துக்கொள்ளலாம். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதிப்பாராக, கர்த்தருடைய சமாதானம் உங்களோடு இருப்பதாக !
ஒருவேளை இந்த பதிவை படித்த பிறகும், ஞானத்திற்காக ஜெபிக்காமல் உங்கள் அறியாமையின் காரணமாக உங்கள் ஆத்துமாக்களை நீங்கள் இழந்துபோனால், அந்த பாவம் என்மேல் சுமராதிருக்கும்
முதலில் இந்த சபையில் இணைய வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு இருந்தது, பிறகு அந்த ஆர்வம் குழப்பமாக மாறியது, குழப்பம் பயத்தை உருவாக்கியது, அதன் பின்னர் நான் யாரையும் காப்பாற்ற முடியாது என்கிற எண்ணத்தோடு என்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள திரும்பி வந்துவிட்டேன். குழப்பத்திற்கு என்ன காரணம்? பயத்திற்கு என்ன காரணம்? என்பதை விளக்கி சொல்ல வேண்டிய கட்டாயத்தை எசேக்கியேlல் 3:17-21 வசனங்கள் எனக்குள் உருவாக்கியது. என்னை தொடர்ந்து தொந்தரவு செய்து என் தூக்கத்தை கெடுத்துக்கொண்டே இருந்ததால், அக்காரணத்தை சொல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டு இருக்கிறேன்.
18 சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்த துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
19 நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான் நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.
20 அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
21 நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார்.
எசேக்கியேல் 3:17-21
சரி, நான் முன்பே கூறியது போல யாக்கோபு 1:5-6 ஒரு மருந்து, அதற்கான நோயை விளக்கி கூற வேண்டிய கட்டாயமும் எனக்கு உண்டு. இதற்காக உங்களுக்கு சில 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சரித்திரங்களை விளக்கி கூற வேண்டிய கட்டாயம் உள்ளது.
Giordano Bruno என்கிற வான்வெளி அறிஞர் கூறிய அறிவியல் உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாத ரோம கத்தோலிக்க சபை, அவரை சிறையில் அடைத்து கொலை செய்தது. அதே காரணத்திற்காக Galileo என்கிற ஆராய்ச்சியாளரும் 7 ஆண்டுகள் சிறையில் இருந்து அங்கேயே மரணம் அடைந்தர். இதற்கு காரணம் அவர்களுக்கு வேதாகமத்தை நேரடியாக படிக்க தெரியாமல் Pope கூறியவற்றை உண்மை என்று நம்பியதால் தான்.
இதன் பின்னர் 718–1492 ஆண்டுகளில் சிலுவை போர் என்று கூறி கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் போரிட்டு, பலர் தங்கள் இன்னுயிரை இழக்க காரணமாக இருந்ததற்கும் வேதாகமத்தை சரியாக படிக்க தெரியாமல் போனது தான் காரணம். இவர்கள் வேதாகமத்தை அறியாததால் உயிர்களை கொன்றவர்கள்
அடுத்ததாக Heavenly Gate
இந்த திருச்சபையை சார்ந்தவர்கள், அவர்களுடைய சபை தலைவர் சொல்லைக் கேட்டு, வேதாகமத்தை சரியாக படிக்காமல், கூண்டோடு தற்கொலை செய்துகொண்டார்கள். இவர்களுடைய தலைவரும் தற்கொலை செய்துகொண்டார். வேதாகமத்தை அறியாததால் தங்களையே மாய்த்துக்கொண்டவர்கள் இவர்கள்.
சரி அது இருக்கட்டும், இப்போது விஷயத்துக்கு வருகிறேன்...
19 ஆம் நூற்றாண்டின்போது ஏறத்தாழ 4000 ரகசிய திருச்சபைகள் உருவாகின. ரகசிய திருச்சபைகள் என்றால்,
1) அவர்களுடைய சபைகளுக்கு சபை அங்கத்தினரின் அழைப்பு இல்லாமல் செல்ல முடியாது
2) வெளிப்படையாக மைதானங்களிலோ, தெருக்களிலோ அவர்கள் கூட்டங்கள் நடத்த மாட்டார்கள்.
அவை கோட்பாடு ரீதியாக சிறு சிறு வேறுபாடுகள் உடையனவாக இருந்தபோதிலும், அணுகுமுறைரீதியாக ஒரே மாதிரியான திருச்சபைகள் தான். யெகோவா சாட்சிகள், மார்மான்கள், Heavenly Gate, Unification Church, ICOC உள்ளிட்டவை.
இவர்கள் என்ன செய்வார்கள். பொதுவாக இந்த சபைகள் திரித்துவ கோட்பாட்டில் இருந்து விலகிச் செல்வார்கள், அல்லது இயேசுவின் குணாதிசயத்தில் ஏதாவது ஒன்றை வேறுபடுத்தி கூறுவார்கள். இது தவறா? என்று கேட்டால், இதில் ஆபத்து சற்று குறைவுதான், ஆனால் ஒருவர் இந்த கோட்பாட்டை பின்பற்ற தொடங்கிய பிறகு செயல்படுத்தும் அணுகுமுறையில் தான் உண்மையான ஆபத்து இருக்கிறது.
உதாரணமாக, யெகோவா சாட்சிகளின் கொள்கைப்படி அவர்கள் இயேசு கிறிஸ்து கடவுள் இல்லை, மிகாவேல் தூதன் என்று கூறுவார்கள், அவர்களிடம் சிறிது நேரம் பேசி, அவர்களுடைய கோட்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொண்டால், அதன் நீங்கள் தூண்டிலின் முனையில் உள்ள கொக்கியில் இருக்கும் புளுவை பிடித்த மீனைப்போல ஆகிவிடுவீர்கள்.
எப்படி?
1. நீங்கள் வேறு எந்த சபைக்கு சென்று இந்த போதனையை பற்றி கூறினாலும் அவர்கள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆகவே உங்கள் சபைக்கு (இவ்விடத்தில் யெகோவாவின் சாட்சிகள்) சென்றால் மட்டும் தான் பரலோகம் செல்ல முடியும் என்று உங்கள் தலைவர்கள் கூறியதை நீங்கள் நம்பத் தொடங்குவீர்கள்,
2. வேதாகமத்தை தானாக படித்து புரிந்துகொண்டு, ஆண்டவரோடு தனிப்பட்ட உறவு கொள்வதை விட்டுவிட்டு, வேதாகமத்தை காட்டிலும் உங்கள் சபை தலைவர்கள் எழுதிய நூல்கள், பத்திரிக்கைகள் மற்றும் கடிதங்களை அதிகமாக படிப்பீர்கள்
3. இதுதான் நான் கூறிய ஆபத்து : ஒருவேளை உங்கள் குடும்பத்தில் இருக்கிறவர்கள் நீங்கள் உண்மை என்று கருதும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், லூக்கா 14:26 மற்றும் மத்தேயு 10 ஆம் அதிகாரம் உள்ளிட்ட சில வசனங்களை மேற்கோள் காட்டி உங்களுடைய குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து வாழும்படி அறிவுறுத்துவார்கள். (பரிசுத்த ஆவியானவரின் உதவியோடு வேதாகமத்தை நன்றாக படிக்கவும், அப்போது இது சரியான அணுமுறையா என்பதை கர்த்தர் உங்களுக்குள் இருந்து வெளிப்படுத்துவார் மத்தேயு 19:3-11, 1 கொரிந்தியர் 7: 12-13)
4. வேறு எந்த போதனையையும் கேட்க விடாமல் செய்வார்கள். அதோடு சபை தலைவர்கள் கூறுகின்ற கருத்துக்களுக்கு எதிர் கருத்து கூறுகிறவர்களை அவமானப்படுத்தி சபையை விட்டு வெளியேற்றுவார்கள்.
5. பொது இடங்களில் சென்று வேதாகமத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட சத்தியங்களை எடுத்துக் கூறும்படி சொல்ல மாட்டார்கள்.
மேற்கண்டவற்றில் என்ன தவறு என்று நீங்கள் கேட்கலாம்
1. இவை இயேசு கிறிஸ்துவும், அவருடைய சீடர்களும் பின்பற்றிய அணுகுமுறை அல்ல. தன்னை கொலை செய்ய வகைதேடிய யூதர்களின் ஜெப ஆலயங்களிலும், பொது இடங்களிலும் இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீடர்களும் பிரச்சாரம் செய்தார்கள்.
2. இது தீவிரவாதிகள் பயன்படுத்தும் ”மனோவசிய தொழில்நுட்பம்” (Mind Control Technology)
இதன் விளைவு என்ன?
1. வேதாகமத்தை சரியாக அறிந்துகொள்ளாமல் தேவையில்லாமல் உங்கள் குடும்பத்தை விட்டு பிரிவீர்கள், அல்லது வேறு ஒருவருடைய குடும்பம் பிரிய நீங்களும் ஒரு காரணமாக இருப்பீர்கள்

2. சத்தியத்தை அறியாத மக்களுக்கு சத்தியத்தை கொண்டு செல்ல வேண்டும் என்கிற பாரம் இல்லாததால் நீங்கள் அறிந்தும் சுட்டிக்காட்டாத பாவங்களை அவர்கள் செய்யும்போது, உங்கள் தலைமேல் அவர்களுடைய பாவம் சுமரும் (எசேக்கியேல் 3:17-21) .
அல்லது பிறர் முன்பாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தை அறிக்கை செய்யாததால், உங்களை குறித்து இயேசு கிறிஸ்து வெட்கம் அடைவார் (லூக்கா 9:26).
3. கடவுளுக்கும் உங்களுக்கு நேரடியான தொடர்பு ஏற்படாதவாறு, தலைவர்கள் கூறுவது தான் உண்மை என்று நம்புவீர்கள், அதனால் வேறு சில பாவங்களையும் செய்யக்கூடிய அபாயம் உண்டு. (மேலே கொடுக்கப்பட்டுள்ள ரோம கத்தோலிக்க சபையின் உதாரணத்தை பார்க்கவும்)
ஆகவே, இன்று உங்கள் வீட்டிற்கு சென்று “ஆண்டவரே, உமது வேதத்தை சரியாக உணர்ந்துகொள்ளும் ஞானத்தை தாரும் ! நான் சரியான பாதையிலே நடக்கிறேனா என்பதை எனக்கு வெளிப்படுத்தும் !” என்று ஜெபியுங்கள், இந்த ஜெபத்தை தினந்தோறும் செய்தால், உங்கள் வாழ்க்கையில் கர்த்தருடைய வழிநடத்துதலை நிச்சயம் காண்பீர்கள். கர்த்தர் தாமே உங்களோடு இருப்பாராக !
இவ்வாறு ஜெபிக்காதவர்களின் பாவம் என் மீது சுமராது இருக்கட்டும் !

Wednesday 8 October 2014

இந்த சபையின் மூலமாக குடும்பங்களை இழந்தவர்கள்

பிற ரகசிய சபைகளைப் போலவே இந்த சபையிலும், தங்கள் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளாத குடும்ப அங்கத்தினர்களிடம் இருந்து பிரிந்து வாழும்படியாக அறிவுறுத்தப்படுவதாக கேள்விப்பட்டேன். இது தொடர்பாக இந்த சபையை குறித்து மோசமான கருத்துக்களை வெளியிட்ட பல நபர்களை மின்னஞ்சல் மூலமாக சந்தித்தேன். அவர்களுள் சிலரைப் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

 Lowell Strieker என்கிறவர் இந்த சபையை குறித்து எழுதிய புத்தகத்தின் முகவுரையில் Millard Melnyk என்கிற இந்த சபையின் முன்னால் அங்கத்தினரை குறித்து பாராட்டும் வண்ணமாக எழுதி இருக்கிறார்.
http://griess.st1.at/millard.htm
http://tochristians.wordpress.com/2012/10/17/cult-thinking-explained/

ஆனால், ஒரு குறிப்பிட்ட வலைப்பூவில் இச்சபையை குறித்து அந்த Millard Melnyk மோசமாக எழுதி இருந்தார். இவர் யார் என்று தெரியாமலேயே இவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது சில திடுக்கிடும் தகவல்கள் எனக்கு கிடைக்கப்பெற்றன. இவரும் இவருடைய மனைவியும் ப்ருன்ஸ்டாட் சபையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அங்கத்தினர்களாக இருந்தவர்கள். இவர் இந்த சபையின் கோட்பாட்டை முழுமையாக ஏற்றுக்கொண்டவர். இப்போதும் கூட இவருக்கு இந்த சபையின் கோட்பாட்டில் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால், இந்த சபையின் தலைவர்கள் செலுத்திய ஆதிக்கம் இவருக்கு பிடிக்கவில்லை, முழுக்க முழுக்க  இந்த சபை தலைவர்களின் பேச்சை மட்டுமே கேட்ட இவருடைய மனைவி, இவரைவிட்டு பிரிந்து வாழும்படி அறிவுறுத்தப்பட்டார். அதன் விளைவாக வயதான காலத்தில் தன் மகன்களோடு Millard Melnyk வாழ்ந்து வருகிறார். இவருடைய மனைவி, மனைவியின் சகோதரி மற்றும் அவரது குழந்தைகள் எல்லோரும் ப்ருன்ஸ்டாட் கிறிஸ்தவ சபைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள்.

 https://freedomofmind.com//Info/infoDet.php?id=212

அடுத்ததாக  Friedrich Griess என்பவர் தன் மகள் Wiltrud குறித்து தனது வலைப்பூவில் எழுதி இருக்கும் கருத்துக்களை நீங்கள் பார்க்கலாம். நன்கு படித்து நல்ல நிலைக்கு வர வேண்டிய மகள், தன் குடும்பத்தை பிரிந்து, படிப்பையும் இழந்த கதை இது. இன்று வரை தன் மகள் திரும்பவும் தன்னோடு வந்து பேச வேண்டும் என்று தளராத வயதிலும் அவருடைய தந்தை காத்துக்கொண்டு இருக்கிறார்.

இவர்கள் மட்டுமல்ல முகப்புத்தகத்தில் The Church:Smith's Friends No More என்கிற பக்கத்தில் இந்த சபையை விட்டு வெளியேறிய, தங்கள் குடும்பத்தை இழந்த பலர் இந்த சபையில் நடைபெறும் தவறுகள், இவர்களுடைய தலைவர்களாகிய கோரா ஸ்மித், லார்சன் உள்ளிட்டவர்கள் செய்யும் ஊழல், BCC Financials என்று இவர்கள் நடத்தும் வங்கியில் நடைபெறும் ஊழல் ஆகியவற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியிட்டு உள்ளனர்.

இந்த சபையின் மூலமாக 1000 பேருக்கு மேல் தங்கள் குடும்பங்களை பிரிந்து உள்ளதாகவும், பலர் இந்த சபையின் மூலமாக தங்கள் படிப்பையும் எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டதாகவும் கூறுகின்றனர். இந்த சபையின் அங்கத்தினர்களாக இருப்பவர்களில் சிலருக்கு இந்த சபையின் தலைமை அலுவலகம் இருக்கும், நார்வே நாட்டை சார்ந்த ப்ருன்ஸ்டாடுக்கு செல்ல வாய்ப்பு கிடைப்பதாகவும், அதே போல வெளிநாடுகளில் இருக்கும் இச்சபை அங்கத்தினர்கள் இந்தியாவுக்கு வந்து பணிசெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
எங்கள் சகோதரத்துவத்தை காட்டவே இதை நாங்கள் செய்கிறோம் என்று இச்சபையை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். இல்லை, இவர்கள் வெளிநாட்டிற்கு செல்ல ஆசைப்பட்டு இவ்வாறு செல்கிறார்கள், ஆனால் அங்கே குறைந்த செலவில் இவர்களுடைய தலைவர்களுக்கு அடிமைகள் கிடைக்கிறார்கள் என்று இச்சபையில் இருந்து வெளியேறுகிறவர்கள் கூறுகின்றார்கள்.




Tuesday 7 October 2014

கோரா ஸ்மித் மற்றும் லார்சன் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்குகள் குறித்த நார்வே நாட்டு இணையதள செய்திகள்

பின்வரும் செய்திகள் பெரும்பாலும் நார்வே நாட்டு செய்தி இணையதளத்தில் வெளியான தகவல்கள்.

http://www.oblad.no/nyheter/smiths-venner-topper-beskyldes-for-million-tapping-1.8296569

இச்சபையின் தலைவர்களான கோரா ஸ்மித் மற்றும் லார்சன் குறித்த பல்வேறு ஊழல் வழக்குகளை http://www.tb.no என்கிற இணையதளம் வெளியிட்டு உள்ளது. இவற்றை உங்களால் நேரடியாக தமிழில் அல்லது ஆங்கிலத்தில் படிக்க முடியாது. ஆனால், Google translate பயன்படுத்தினால், நார்வே நாட்டு மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மாற்றிவிடலாம், அதன் பின்னர் ஆங்கிலம் படிக்கத் தெரிந்தவர்கள் இதை ஆங்கிலத்திலேயே படிக்கலாம், அல்லது யாரிடமாவது கேட்டு தமிழில் அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள். 




மேலும் பல ஆண்டுகளாக கோரா ஸ்மித் மற்றும் லார்சன் மீது தொடரப்பட்ட வழக்குகளையும் அது தொடர்பான நார்வே நாட்டு செய்திகளையும் Friedrich என்பவர் ஆங்கிலத்திலும், ஜெர்மன் மொழியிலும் தொகுத்து இருப்பதை கீழே உள்ள வலைப்பூவில் காணலாம் 

இவற்றை எல்லாம் படித்தீர்களானால், உண்மையில் இந்த சபையில் என்ன நடக்கிறது என்பதை நான் சொல்லாமல், நீங்களாகவே புரிந்துகொள்ளலாம்.
http://griess.st1.at/sf.htm

Blogs about BCC

Followers